செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலை மாநகர சபை தமிழரசு வசம்! – மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு (படங்கள் இணைப்பு)

திருகோணமலை மாநகர சபை தமிழரசு வசம்! – மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு (படங்கள் இணைப்பு)

1 minutes read

திருகோணமலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.

இந்த அமர்வுக்குக் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமை தாங்கினார்.

மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கு எந்தவொரு கட்சியும் அதற்குறிய 50 வீதம் கோரத்தைக் கொண்டிருக்காத நிலையில் மேயர் தெரிவு இடம்பெற்றது.

இலங்கைத் தமிழசுக் கட்சியின் சார்பில் கந்தசாமி செல்வராஜாவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் மேயர் தெரிவுக்குப் போட்டியிட்டனர்.

சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்புக்குக் கோரியதனால் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் 6 வாக்குகளையும் பெற்றனர்.

அதனடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகர சபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்துத் துணை மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமட் மெளசூம் சபையில் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More