Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் திடீரென வீசிய புயல்!

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் திடீரென வீசிய புயல்!

1 minutes read

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடும் புயல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் நேற்று முன் தினம் அதிகாலை திடீரென கடும் புயல் தாக்கியது. இதில், லூயிஸியானா மாகாணத்தைச் சோந்த 2 பேர் உயிரிழந்தனர்.

மிஸிஸிப்பி மாகாணத்தில் புயல் சீற்றம் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் போக்குவரத்து தடைபட்டதுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

புளோரிடா மாகாணத்தில் கடும் புயல் சீற்றத்துக்கு ஏராளமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புளோரிடாவின் பென்சகோலா நகரில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. எனினும், இது புயலால் ஏற்பட்டது என்பதை தேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அப்பகுதியில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதாக அது தெரிவித்துள்ளது. மேலும், பென்சகோலா செய்தி நிறுவனம் 13 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டதாக கூறியுள்ளது. சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More