செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மார்கழி காலையின் நன்மைகள்

மார்கழி காலையின் நன்மைகள்

2 minutes read

பனிக்காலத்தின் தொடக்க மாதமாக வரும் மார்கழி மாதம் என்றாலே ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

பக்தியில் ஈடுபட்டு இறைவனை சரணடைய உரிய மாதம் மார்கழி மாதமாகும். ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் கார்த்திகையில் மாலை அணிய முடியாவிட்டாலும் கூட, மார்கழி மாத தொடக்கத்தில் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.

அதே போல், பழனி, திருச்செந்தூர் முருகன் ஆலயங்களுக்கு பாதயாத்திரை செல்பவர்களும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்தால், புண்ணியம் கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை.

கிராமப்புறங்களில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசம் இல்லாமல், அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, கும்பலாக பஜனை பாடிக்கொண்டு வீதிகளில் உலா வருவது தனி சுகம் தான்.

அப்போது அவர்கள் நினைப்பது ச்சே… ஆண்டு முழுவதும் மார்கழி மாதமாகவே இருந்து விட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்பது தான். அதிலும் பஜனை முடிந்து கொஞ்சூண்டு பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிடும் சுகம் இருக்கே.

அந்த சுகத்திற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது. மார்கழி கோலங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலில், மற்ற மாதங்களில் வேண்டுமானால், கன்னிப் பெண்கள் சூரியன் வந்து முதுகில் அறையும் வரை தூங்கினாலும், மார்கழி மாதம் பிறந்து விட்டலே, அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டு, நோன்பிருந்து, வாசலில் கோலமிடுவார்கள்.

அதோடு அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி வருவார்கள். எனவே, மற்ற மாதங்களில் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினாலும், இந்த மார்கழி மாதத்திலாவது அனைவருமே அதிகாலை வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்தால் நல்லது.

அதிகாலை எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும்.

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும். விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது.

இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது.

மார்கழியில் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது, மார்கழியில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு இறைவனை தரிசித்தால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும் என்பதும் நம்பிக்கை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More