புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மைனாகோகமவில் பொலிஸாரின் பஸ்கள் அகற்றப்பட்டன

மைனாகோகமவில் பொலிஸாரின் பஸ்கள் அகற்றப்பட்டன

1 minutes read

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று பிற்பகல் பொலிஸார் நீதிமன்ற உத்தரவொன்றை அறிவித்தனர்.

அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள அனைவரும் அங்கிருந்து வௌியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தாலும், அது தொடர்பில் மக்கள் விளக்கம் கோரினர்.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்பாக நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை பொலிஸார் இன்று பிற்பகல் அகற்றினர்.

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்றும் பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கிருந்து பேரணியாக கோட்டாகோகமவிற்கு சென்றனர்.

நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கோரி, மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கும் அவர்கள் முயற்சித்ததனர்.

பின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் மகஜரை பெற்றுக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More