செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் Brighton கடற்கரைப் பகுதியில் மூன்று பெண்கள் சடலங்களாக மீட்பு!

Brighton கடற்கரைப் பகுதியில் மூன்று பெண்கள் சடலங்களாக மீட்பு!

1 minutes read

இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) கடற்கரைப் பகுதியில் மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சசெக்ஸ் (Sussex) காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 05:45 மணியளவில், கடலில் இருந்த மூன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த அச்சம் காரணமாக அவசரக்கால சேவைகள் அழைக்கப்பட்டன.

பிரைட்டன் கடற்கரையில் உள்ள மேடிரா டிரைவ் (Madeira Drive) பகுதிக்கு அருகில் இந்த உடல்கள் மீட்கப்பட்டன. இந்த மீட்பு நடவடிக்கையில் கடலோர பாதுகாப்புப் படையின் (Coastguard) ஹெலிகாப்டர், மூன்று RNLI உயிர் காக்கும் படகுகள், மற்றும் சசெக்ஸ் முழுவதிலும் உள்ள பல்வேறு மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இன்று காலை பிரைட்டன் கடற்கரைப் பகுதியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றினால் அலைகள் கரையில் மிகவேகமாக மோதிக் கொண்டிருந்தன என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு “துயரமான சம்பவம்” என்று தலைமை கண்காணிப்பாளர் ஆடம் ஹேய்ஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும், இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விசாரணைகளும் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

தற்போது அந்தப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மேடிரா டிரைவ் மற்றும் பிளாக் ராக் (Black Rock) வாகன நிறுத்துமிடப் பகுதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.