ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர்.
நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மேலும் 13 அகதிகள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
