கனடாவில் மூன்றாவது வருடமாக திருமதி இந்திராணி நாகேந்திரன் அவர்களால் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்ட தேர்வுகள் மார்க்கம் நகரில் மே 11 ம் திகதி நடைபெற்று அதில் 20 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அந்த வகையில் ஆனி 7 ந் திகதி நடைபெற்ற முதலாம் சுற்றில் பக்தி பாடல்கள் 16 போட்டியாளர்களால் பாடப்பட்டு அதில் 13 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த சுற்றுக்காக தம்மை தயார் படுத்தும் 55 வயதுக்கு மேற்பட்ட இவ் வயோதிபர்களின் ஆர்வமும் ஆரவாரமும் மக்களிடையே இப்போட்டி பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்திருக்கும் வயோதிபர்களின் திறமைகளை, கனவுகளை மேடையேற்றி கௌரவிக்கும் திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் சேவையினை பாராட்டுவது சிறந்ததாகும்.
முதலாம் சுற்றில் நடைபெற்ற இந் நிகழ்வுகளின் தொகுப்பினை கீழே உள்ள வீடியோவில் பார்வையிடலாம்.
