செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வானம்! | கவிதை | முல்லைஅமுதன்

வானம்! | கவிதை | முல்லைஅமுதன்

0 minutes read

வானம்
திடிரென
கதவைத் தட்டியது

அவசரமாக
வந்து
மூலையில் குந்திக்கொண்டது
பயத்தினால்
அல்லது வெறுப்பினால்
நடுங்கியபடியே
இருந்தமை
ஆச்சரியமாக இருந்தது
மேசையில்    அமர்ந்தபடி நான்..

சந்திரனுக்கும்,
சூரியனுக்கும்
அடிக்கடி சண்டை..
இதற்குள்
தங்களுக்குள்
நட்சத்திரங்களைப் பங்கிட்டுக்கொணடன

துப்பாக்கி சுடப் பழகுபவனும்
என்னைப் பார்த்தே சுடுகின்றான்.
வானம்வசப்படும்
என்று யாரும் இப்போ சொல்வதில்லை..

என்ன செய்தாய்?
என்னைக்
களங்கப்படுத்தாதீர்கள் என்றேன்..
நிர்வாணப்படுத்தாதீர்கள் என்கிறேன்..
என்னை வைத்தே
அணுவாயுதங்களை ஏவுகிறார்கள்..
தட்டிகேட்டேன்.
ஒளிந்துகொண்டேன்.
தேடிக்கொண்டிருக்கிறர்கள்

கதவு தட்டப்பட திறந்தேன்..
ஆயுததாரிகள்..
திபு திபு என உள்நுழைந்தபடி தேடினார்கள்

மேசையிலிருந்த
கவிதைகளைப் பொறுக்கியபடி
ஒருவன் நகர..
கைது செய்யப்பட்ட
நான் நடந்தேன்..

வானம் முழித்தபடி
தப்பித்தேனென்று முணுமுணுத்தது..
ஆனாலும்,
நான்
கவிஞன் வீட்டில்    ஒளிந்திருக்கக்கூடாது
எனவும் நினைத்தது..
கவிதை வெளியில்
வானம் எப்போதும் இல்லை..

 

– முல்லைஅமுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.