செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? – நடிகை தபு விளக்கம்

51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? – நடிகை தபு விளக்கம்

1 minutes read

தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு பிரபல இந்தி நடிகர் தான் காரணம் என்று நடிகை தபு தெரிவித்து உள்ளார்.

51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? - நடிகை தபு விளக்கம்

தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தபுவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

பின்னர் அந்த காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரணம் என்று தபு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார். 

தபு, அஜய் தேவ்கன்

நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு பையனுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. அந்த பையனுடன் சண்டை போடுவார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன்” என்றார்.

விஜய் பத், கோல் மேன் அகெய்ன், திரிஷ்யம், போன்ற படங்களில் தபுவும் அஜய் தேவ்கனும் ஜோடியாக நடித்துள்ளனர். அஜய் தேவ்கனை நடிகை கஜோல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.