Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குஷ்பு பற்றி சுவையான குறிப்புகள்

குஷ்பு பற்றி சுவையான குறிப்புகள்

5 minutes read

போவோமா ஊர்கோலம்?’ என்று கண் சிமிட்டி அழைத்தவரின் ஊர்கோலம், தளங்கள் பல தாண்டியும் தொடர்கிறது. சமீப காலத்தில் சினிமா, சின்னத்திரை, அரசியல் என்று அனைத்திலும் இத்தனை அழுத்தமாக, வெற்றி முத்திரை பதித்தவர்கள் எவரும் இல்லை. இது வரைஅரசியல் அடைமொழி’ பெறாத குஷ்புவின் அடையாளங்களில் சில இங்கே….

· குஷ்புவின் ஒரிஜினல் பெயர் நக்கத்கான். சினிமாவில் `நக்கத்’ என்று உரிமையோடு அழைக்கும் ஒரே ஒருவர் ….. கமல், சுந்தருக்கு குட்டிம்மா… வைஃபி, நண்பர்களுக்கு…. குஷ்!

· நடித்ததில் பிடித்த படங்கள் சின்னத்தம்பி’, ஜாதி மல்லி’,வருஷம் 16’, கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் பிடித்தவை உள்ளத்தை அள்ளித்தா’,அன்பே சிவம்’, அவர் நடித்ததில் பிடித்த படம் `தலைநகரம்’!

· வீட்டில் எந்த வேலையும் இல்லாவிட்டாலும் கூட அடுக்கிவைத்திருக்கும் பொருட்களைக் கலைத்துப்போட்டு மீண்டும் அடுக்கும் அளவுக்கு வொர்க்கஹாலிக். `ஏதாவது லேப்ல கொண்டுபோய்தான் உன்னைச் சோதனை பண்ணணும்’ என்று சுந்தர் கிண்டலடிக்கும் அளவுக்கு சுறுசுறுப்புத் திலகம்!

· தமிழில் கார்த்திக், அர்விந்தசாமி, பாலிவுட்டில் அமிதாப், அமீர் கான் பிடித்த ஹீரோக்கள். பாலிவுட் கோவிந்தா இவருடைய சிறந்த நண்பர்!

· மழலைப் பேச்சு, கிறுக்கல் கையெழுத்து, பிறந்த நாள் உடைகள், வீசியெறிந்த சாக்லேட் பேப்பர்கள், புகைப்படங்கள் என்று தன் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்திருக்கிறார்!

· முறை மாமன்’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துகொண்டு இருந்த சமயம்பம்பாய்’ படம் பார்க்கப் போனார்கள். குஷ்பு வந்த விஷயம் தெரிந்து தியேட்டருக்கு வெளியே தள்ளுமுள்ளு. ரசிகர்களிடம் இருந்து கிட்டத்தட்ட குஷ்புவை மீட்டு, கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு காருக்கு ஓடி வந்தபோதுதான் சுந்தரின் மீது காதல் பூத்ததாம்!

· வழக்கமாக நடிகைகள் வயதைச் சொல்லத் தயங்குவார்கள் பிறந்த நாள் கேட்டால், தேதியும் மாதமும் மட்டும் சொல்வார்கள். ஆனால், `பிறந்த நாள்- 29.09.1970 எனக்கு 39 வயதாகிறது!’ என்பார் குஷ்பு!

· நட்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர் அனு, மதுபாலா (ரோஜா’ ஹீரோயின்), சுப்பு (பஞ்சு அருணாசலத்தில் மகன்), சுஜாதா விஜயகுமார் (ஜெயம்’ ரவியின் மாமியார்) ஆகிய ஐவர்தான் குஷ்புவின் மிக நெருங்கிய நண்பர்கள்!

· ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் ஸ்பெஷல், மற்ற வார நாட்களில் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். மகள்கள் படிக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பெற்றோர்கள் சங்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுப்பார். `குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாகச் செல்லம் கொடுக்கிறேன் என்பதுதான் சுந்தருக்கு என் மீது கோபம்!’ என்பார்.

· தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும், மலையாளம் பேசத் தெரியாது!

· வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் எது என்று கேட்டால், 1986 செப்டம்பர் 13’ என்பார் காரணம் கேட்டால், சொல்ல மாட்டார்!

· தமிழில் சத்யராஜீடன் நடிகன்’ தொடங்கிபெரியார்’ வரை 13 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரபுவுடன் 10 படங்களில் ஜோடி. பி.வாசுவின் இயக்கத்தில் ஒன்பது படங்கள்!

· வருஷம் 16’,கிழக்கு வாசல்’ என்று கார்த்திக்- குஷ்பு ஜோடிகள் அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்தாலும் தொடர்ந்து இணைந்து நடிக்கவில்லை. கார்த்திக் என் நெருங்கிய நண்பர். அப்பப்ப ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவோம். அப்படி ஒரு சண்டையால் கிட்டத்தட்ட மூணு வருஷம் பேசாமலேயே இருந்தோம்.விக்னேஷ்வர்’ படத்துல நடிக்கும்போது மறுபடியும் ஃப்ரெண்ட் ஆனோம். அந்த நட்பு இப்போதும் அதே சண்டை சச்சரவுகளோடு தொடருது!’ என்பார். கார்த்திக்கை குஷ்புவின் மகள்கள் அவந்திகா, அநந்திதா இருவரும் `முரளிப்பா’ என்று அழைப்பார்கள்!

· கமல்தான் தனக்குச் சிறந்த ஜோடி என்பார். மைக்கேல் மதன காமராஜன்’ முதல் நாள் படப்பிடிப்புக்கு முழு மேக்கப்பில் வந்த இவரைப் பார்த்து அதிர்ச்சியான கமல்,போய் முகத்தை நல்லா வாஷ் பண்ணிட்டு வா. இந்தப் படம் முழுக்க உனக்கு மேக்கப்பே கிடையாது’ என்றாராம். இன்றும் கமலைப் பார்த்தால் தனது அந்த எக்ஸ்ட்ரா மேக்கப் முகம்தான் ஞாபத்துக்கு வரும் என்பார் நண்பர்களிடம்!

· வளர்ப்புப் பிராணிகளில் நாய் என்றால் செல்லம். மும்பையில் 14 ஆண்டுகள் வளர்த்த சாம்பியன்’ என்ற நாயின் நினைவாக அதே பெயரிட்ட ஒன்று உட்பட,மென்டோ’ ,பிளஃபி’ என மூன்று ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களும்சில்லி என்ற `பக்’வகை நாய் ஒன்றும் வளர்ந்து வருகிறார்!

· எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வு நிச்சயம் இருக்கும் என்று நினைப்பது தனது நல்ல பழக்கம் என்பவர், காச்மூச் என்று கத்திக் குவிக்கும் முன்கோபம் மட்டுமே கெட்ட பழக்கம் என்பார்!

· அன்றும் இன்றும் ரவி சாஸ்திரி மட்டுமே இவருக்கு பிடித்த ப்ளேயர், உடலை வருத்தி மட்டையை விளாசி ஃபோர், சிக்ஸ் அடிப்பவர்களுக்கு மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் மணிக்கட்டை மட்டுமே லாகவமாகத் திருப்பி சாஸ்திரி ஃபோர் அடிக்கும் அழகே அழகு என்பவர். இன்றும் சாஸ்திரியின் கிரிக்கெட் வர்ணனையை ரசிப்பாராம்!

· மூர்த்தி’ என்று இயற்பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பார்த்திபன் நல்ல நண்பர். இருவரும்வாடா… போடா…’ என்று தான் பேசிக்கொள்வார்கள். `சின்னத்தம்பி’ வெளியான சமயம் பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாச தொனியில் எழுதிய கடிதத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார்!

· இன்றைய ஹீரோக்களில் யாருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் என்று கேட்டால் யோசிக்காமல் வரும் பதில், `தனுஷ்’!

· தர்மத்தின் தலைவன்’ தொடங்கி இன்று வரை ரஜினியும் குஷ்புவும் சந்தித்தால் மராத்தியில்தான் பேசிக்கொள்வார்கள். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் ஆகிய நால்வரும் குஷ்புவுடன் ஒருடாம்பாய்’ நினைப்பில்தான் பழகுவார்களாம்!

· அஞ்சலிதேவி, சாவித்ரி, சரோஜாதேவி, ராதிகா, ரேவதி, ஊர்வசி ஆகிய ஆறு நடிகைகளும் இவருக்குப் பிடித்தவர்கள். இதில் அழுது வடிவதுபோல் வரும் சரோஜாதேவியைப் பிடிக்காதாம் கிளாமராக நடிக்கும் சரோஜாதான் இவர் சாய்ஸ்!

· அரவிந்த்சாமியின் தீவிர ரசிகை அவர் தொடர்ந்து படங்களில் நடிக்காதது இவருக்குப் பெரிய வருத்தம் தன் படங்களில் நடிக்க வற்புறுத்தும்போது, `தொப்பை விழுந்துடுச்சு. தலை சொட்டை ஆயிடுச்சு, என்னை யார் ரசிப்பா?’ என்று தட்டிக்கழிப்பாராம் அரவிந்த்சாமி!

· குஷ்புவிக்கு திருச்சிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியது செய்தி. ஆனால், இன்று வரை அந்த ரசிகர் யார் என்றும் தெரியாது, அந்த கோயிலையும் நான் பார்த்ததில்லை என்பார் குஷ்பு!

· கிளிசரின் போட்டாலும் சில நடிகைகளுக்கு அழுகை வராது. ஆனால், குஷ்பு கிளிசரின் போடாமலேயே இயல்பாக அழுவார். `இந்த டயலாக்குக்கும் அந்த டயலாக்குக்கும் இடையில் உங்க கண்ணுல இருந்து டிராப்ஸ் விழணும்’ என்றாலும் பக்காவாக நடித்துக் கொடுப்பார்!

· கற்பு பற்றி அளித்த பேட்டிக்குப் பிறகு இவர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 43 வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். “என் உச்சபட்ச போராட்டக் குணத்தை நானே உணர்ந்து இந்த வழக்கு விசாரணை சமயத்தில்தான்!’’ என்பார்.

தொகுத்து வழங்குபவர் | திருமதி ஆனந்திராம்குமார்

நன்றி : ஆனந்த விகடன் | lakshmansruthi.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More