Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் ஆசை உண்டு | நடிகை அதிதி பாலன்

நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் ஆசை உண்டு | நடிகை அதிதி பாலன்

1 minutes read

‘நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது’ என ‘அருவி’ படப் புகழ் நடிகை அதிதி பாலன் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான தங்கர் பச்சான் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ஸ்டைலிஷ் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை வி ஏ யூ மீடியா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் துரை. வீரசக்தி தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்றது.

இதன் போது பங்கு பற்றி பேசிய நடிகை அதிதி பாலன், ” தமிழ் திரைப்பட இயக்குநர்கள் எம்மைத் தொடர்பு கொண்டு, தொடர்ந்து அழுத்தமான வேடத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எமக்கு விருப்பமில்லை. நகைச்சுவை வேடங்களிலும், மென்மையான காதல் கதைகளிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது” என்றார்.

இதனிடையே நடிகை அதிதி பாலன் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற இந்த திரைப்படத்தில், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More