Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கேரட் பொங்கல் எப்படி செய்வது?

கேரட் பொங்கல் எப்படி செய்வது?

1 minutes read

தேவையான பொருட்கள்
கேரட் – 200 கிராம்,
பச்சரிசி – 400 கிராம்,
தேங்காய் – 1 மூடி,
சர்க்கரை – 300 கிராம்,
நெய் – 100 கிராம்,
ஏலக்காய் – 6,
முந்திரி – 15,
கிசுமுசுப்பழம் – 20.

செய்முறை
கேரட்டைக் கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும். தேங்காயையும் துருவவும். வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கிசுமுசுப்பழம், இரண்டாக உடைந்த
முந்திரியைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவல், கேரட் துருவலை தனித்தனியாக வறுக்கவும். ஏலக்காயை பொடியாக தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும், அரிசியை போட்டு வேகவிடவும். 3/4 பாகம் வெந்தவுடன் சர்க்கரையை போட்டுக் கிளறவும். பிறகு துருவி வைத்துள்ள கேரட், தேங்காய் போட்டு நெய்யை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுக் கிளற வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்தபின், பதமாக வந்ததும் முந்திரி, கிசுமுசுப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More