தேவையானவை
சிக்கன் – 3 /4 கிலோ,
வெங்காயம் – 2,
எண்ணெய் – 1 /4 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை – 1 /4 கப்,
புதினா – 1 /4 கப்,
குங்குமப்பூ – 1 டீஸ்பூன்,
பால் – 1 /2 கப்,
பாஸ்மதி அரிசி – 3 கப்,
பிரியாணி இலை – 1,
கிராம்பு – 2,
மராட்டி மொக்கு – 1,
அன்னாசிப்பூ – 1,
உப்பு-தேவைக்கு.
சிக்கனுக்கு தேவையானவை
பச்சை மிளகாய் – 5,
இஞ்சி,
பூண்டு விழுது – 2 டேபிள் பூன்,
தயிர் – 1 /2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1 /4 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க
மல்லித்தழை – 1 /4 கப்,
பட்டை – ஒரு இன்ச்,
புதினா – 1 /2 கப்,
மிளகு – 7,
ஏலக்காய் – 3,
கிராம்பு – 3,
மைதா மாவு – 1/2 கப்.
செய்முறை
முதலில் அரிசியை களைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக பொரிக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை நீங்கலாக மற்றவற்றை வறுத்து மைய அரைத்து, புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து, சிக்கனுடன் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
இதன் மேல் சிறிது வறுத்து வைத்துள்ள வெங்காயம் சேர்க்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, நெய், எண்ணெய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து கொள்ளவும். மற்றொரு கடாயில் மசாலாவில் ஊறிய சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகவைக்கவும். அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, நெய், எண்ணெய் சேர்த்து, முதலில் வேக வைத்துள்ள சாதத்தில் பாதியை பரவலாக வைக்கவும். பின் சிக்கனையும் சேர்க்கவும். அதன் மேல் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை பரவலாக தூவவும்.
பின் மீதம் உள்ள சாதத்தை கொட்டி பரப்பி மீதமுள்ள வெங்காயம், மல்லி, புதினா இலை சேர்த்து, இறுதியாக குங்குமப்பூ கலவையை ஊற்றவும். பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மைதாவை, சப்பாத்தி மாவு போல் பிசைந்து பாத்திரத்தின் மூடியுடன் சேர்த்து நன்கு ஒட்டவும். சிறு தீயில் வைத்து அரை மணிநேரம் வரை வேக விடவும். முந்திரி, திராட்சை போன்ற நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.
நன்றி
தினகரன்