Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்?

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்?

2 minutes read

மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான

பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா?

இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிக ளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? தலைக்கு குளிக்கலாமா… குளிக்கக் கூடாதா என்பதில் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

குளித்தல் என்பது வெறும் அழுக்கை நீக்குதல் என்பதல்ல. அவ்வா று எடுத்துக்கொண்டால் நாம் அனைவரும் இரவு நேரங்களில் தான் குளிக்க வேண்டும். இரவு முழுவதும் சூடாக இருந்த உடலை குளிர் வித்தலான நிகழ்வு குளித்தல். அச்சமயத்தில் நம் உடலில் உள்ள பித்தத்தன்மை மாறி, கபத்தன்மை ஏற்படும்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மாதவிலக்கு நாட் களில் ஓய்வாக இருந்தனர். அதனால் உடல் சூட்டின் அளவு அனை வருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. அக்காலத்தில் ஒருவிதமான மரபு பின்பற்றப்பட்டது. இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வரு கின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை.

இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமா க சொல்லமுடியாது. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும்போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந் தரவுகள் வரலாம். இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாத விலக்கு நேரத்தில் பெண்க ள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்க ளுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்சனைகள் உள்ள பெண் கள் தலைக்கு குளிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்க ள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைபிடிக்கலாம்’

இந்நாட்களில் ஆரோக்கியமான எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்க த்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலரு க்குச் சளி பிடிக்கலாம்.

கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. இந்நாட்களில் 4மணிநேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக் கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறைய தண்ணீர், இரும்புச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More