செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் வெயில் காலத்துக்கு ஏற்ற 5 பெஸ்ட் பேஸ்பேக்குகள்.

வெயில் காலத்துக்கு ஏற்ற 5 பெஸ்ட் பேஸ்பேக்குகள்.

2 minutes read

வெயில் காலத்தில் சருமம் அதிகமாக வறட்சியடையும். சூரியக் கதிர்களின் தாக்கத்தால் கருமையாவதுடன் சன் டேன், சரும எரிச்சல் போன்றவை உண்டாகும். அதனால் வெயில் காலத்தில் சருமத்துக்குப் பயன்படுத்தும் பொருள்கள் நீர்ச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அதனால் நீர்ச்சத்து நிறைந்த பொருள்களைப் பயன்படுத்தினால் இயல்பாகவே சருமம் பொலிவடையும்.

​வாழைப்பழம் – ஆரஞ்சு

சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள மிகச்சிறந்த பேக் என்றால் அது வாழைப்பழ ஆரஞ்சு பேக் தான்.

வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஆரஞ்சு சாறு சேர்த்துக் கொண்டு. அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதை அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். முகம் பளிச்சென்று இருக்கும்.

விசேஷ நாட்களில் இந்த கலவையுடன் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்பேக்காக போடலாம்.

​யோகர்ட் – தர்பூசணி

தயிர் மற்றும் யோகர்ட் எண்ணெய்ப் பசை சருமத்துக்கு மிகச்சிறந்த பலனைத் தரும். தயிர் சருமத்துக்கு மிகச்சிறந்த மாய்ச்சரைஸராகச் செயல்படும்.

அதேபோல தர்பூசணியும் வெயிலுக்கு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. இவை இரண்டையும் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்யும்போது சருமம் அதிக மென்மையோடு இருக்கும்.

தர்பூசணி சாறில் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

​புதினா – முல்தானி மட்டி

புதினா மற்றும் முல்தானி மட்டி இரண்டுமே குளிர்ச்சியான தன்மை கொண்டவை. வெயில் காலத்தில் அதிகப்படியான சூரிய ஒளிக் கதிர்வீச்சால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதில் புதினா மிகச்சிறந்த பங்காற்றுகிறது.

முல்தானி மட்டி சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சிக் கொள்கிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பேஸ்பேக்காக இருக்கும்.

பயன்படுத்தும் முறை

புதினா இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் முல்தானி மட்டியைச் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

​வெள்ளரிக்காய் – தேன்

வெள்ளரிக்காய் குளிர்ச்சித் தன்மை கொண்டது. வெயில் காலத்தில் தினமும் கூட வெள்ளரி சாறை முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இது சூரிய ஒளியின் தாக்கத்தால் உண்டாகும் சன் டேன் மற்றும் கருமையைப் போக்கும்.

தேன் சருமத்துக்கு மிகச்சிறந்த மாய்ச்சரைஸராகச் செயல்படும். சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காயை தோலுடன் பேஸ்ட்டாகவோ அல்லது சாறு மட்டுமோ எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருக்கலாம். பின்பு சாதாரண நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய சருமத்தை நீங்களே தொட்டுப்பாருங்கள். பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

குளிர்காலத்தில் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சியான தன்மை சளி பிடிக்கும்.

​ரோஸ் வாட்டர் – சந்தனம்

சந்தனம் சருமத்தை மட்டுமல்ல, உடலையும் சேர்த்து குளிர்ச்சியாக வைத்திருக்கச் செய்கிறது.

முகத்தை பளபளவென கண்ணாடி போல வைத்துக் கொள்ள, இயற்கையான பொலிவை பெற காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது சந்தனத்தை தான்.

சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ரோஸ்வாட்டர் உதவியாக இருக்கும். இந்த இரண்டு குளிர்ச்சியான பொருள்களையும் சேர்த்து கோடை காலத்தில் சருமத்துக்கு அப்ளை செய்யும்போது சருமம் அதிக பொலிவுடனும் நீரேற்றத்துடனும் இருக்கும்.

பயன்படுத்தும் முறை

1 ஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும்.

அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகமும் பளிச்சென்று மாறிவிடும். சருமம் வெயிலுக்கு ஜில்லென்றும் இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.