Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பரதக்கலையின் அரங்கேற்றம் | இலண்டனில் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம்

பரதக்கலையின் அரங்கேற்றம் | இலண்டனில் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம்

1 minutes read

நடன ஆசிரியர் ஸ்ரீமதி அபிராமி பூவநேந்திரன் கிரிஷான் அவர்களின் மாணவிகளான குமாரி Youzra விஜயக்குமார் மற்றும் குமாரி Mekenzi விஜயக்குமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாளை மாலை நடைபெற உள்ளது. இலண்டன் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள Watersmeet அரங்கில் இவ் மாணவிகள் தமது குரு முன்னிலையில் தமது பெற்றோர் மற்றும் சபையோரின் வாழ்த்துக்களுடன் அரங்கேற்றம் காணுகின்றார்கள்.  

மேலைத்தேச நாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது மொழி கலை கலாசாரம் என தடங்கள் பதித்து வாழ்வதும் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றினை கடத்தி அழியாத கலை வடிவங்களாக பாதுகாப்பதிலும்  முனைப்புக்காட்டுகின்றார்கள், இந்த வகையில் நடன ஆசிரியர் ஸ்ரீமதி அபிராமி பூவநேந்திரன் கிரிஷான் அவர்கள் பிரித்தானியாவில் வாழும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நடன ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேவி நர்த்தாலயா நடனப்பள்ளியின் இயக்குனர் ஆவார். அரங்கேற்றம் காணும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் எமது வாழ்த்துக்கள்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More