Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மீண்டும் இரத்தம் – வேல்.நயன்

மீண்டும் இரத்தம் – வேல்.நயன்

1 minutes read
ஈஸ்டர் தாக்குதலிற்கான கவிதை

வங்கம் சூழ்ந்து பெற்று எடுத்த

தங்க நிகர் அழகு நாட்டில்

பங்கம் விளை வித்தது நீயோ

அங்கம் இழந்து நிக்கிறது தனியே

 

பித்து பிடித்த மத வெறியனே

புத்தன் சிவன் யேசு அல்லாஹ்

இத்தனை மதம் இருப்பது ஏனடா

செத்தவர் அனைவரும் மனிதர் தானேடா

 

உயிர்த்த ஞாயிறில் உயிர் பறிக்க

உனக்கு உரிமை தந்தவர் யாரடா

உயிரை மீதம் கொண்டவர் சிலரோ

உறவை இழந்து நிக்கிறார் பாரடா

 

தேளின் விடம் கொண்டவன் உன்னால்

தேடி அழுகிறோம் குருதியில் உறவை

தேசம் கடந்து வந்தவரும் இங்கு

தேகம் உறைந்து கிடக்கின்றார் சேர்ந்து

 

வஞ்சம் தீர்க்க குண்டாய் வெடிக்க

நஞ்சு கலந்து பிறப்பு எடுத்தவனே

பிஞ்சுக் குழந்தைகள் கண்ணில் தெரிகையிலும்

கொஞ்சம் மனம் இரங்கலையா உனக்கு

 

யுத்தம் கடந்த பூமியில் மீண்டும்

சத்தம் வெடிக்க வைத்தது எதற்கு

இரத்தம் தெறித்த சுவர்களை பார்க்க

நித்தம் அழ தோணுது எமக்கு.

 

கவி வரிகள்

வேல்.நயன்

புளியம்பொக்கணை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More