செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நீட்சி | கேசுதன்

நீட்சி | கேசுதன்

0 minutes read

நீட்சியின் பெருவெளியில்
குருதி தடங்களை மிதித்தபடி
கடக்கின்றேன்

அருகே பரந்து விரிந்த கடலலைகளை
மோதிடும் கார்மேகங்கள் எதையோ
சொல்லிவிட்டு கிடக்கின்றது

என் அருமை தெய்வங்களே
என்னை மன்னியுங்கள்
நீங்கள் புதைந்த தடங்கள்
மிதித்த வண்ணம் பயணிக்கின்றேன்

பாறைகளில் பட்தெரிந்த நீர்த்துளிகளை போல்
சில்லுசில்லாக சிதறிய சதை
துண்டங்கள் என் கால்கள்
நெருடுகிறது

ஆறடிகூட இல்லை உதிரம்
கொட்டிட புதைந்த என் அவயம்
மண் இன்னும் அமைதி
விரவுவது உணர்வாய்

என்றோ ஓர்நாள் இயேசுவின்
பணிப்புரையில் உயிர்ப்பெழ
மாட்டீரோ

தாகங்கள் தணியாமல்
அலைகளும் அடங்கவில்லை
நான் கடக்கும் பாதைகளும்
நீள்கிறது
செல்லும் இடமெல்லாம்
உதிரத்துளிகள் பட்டுப்பூச்சியாய்
ஊர்கிறது

அருகே கடல் அன்னையவள்
வீசிடும் காற்றுகளை சுவாசிக்கின்றேன்
என் சொந்தங்களின் அஸ்தியை
அள்ளி வீசுகிறாள்
தொண்டைக்குழியில்
அடைபட்டுக்கிடக்கிறது

ஓ கடல் தாயே
என் சொந்தங்கள் அள்ளி குவித்து
எரிக்கப்பட்ட சாம்பல்கள்
எத்தனை ஆயிரம் தொன்களை
கரைத்துள்ளாய்

நீ வீசிடும் காற்றில் கந்தகம்
அறிவேன்
அஸ்திகளை மறைத்துள்ளாய்
இப்போதறிவேன்
எனை கடந்த மேகங்கள்
இதைத்தான் கூறவந்ததுவோ

மண்டியிட்டு கடந்தேன்
எழ முடியவில்லை
கை கூப்பி அழுதேன்
கேட்கவில்லை
உதிரம் வழிந்தோட உணர்ந்தேன்
இனியும் வாழ வழியில்லை என

என் தேசம் எங்கே
குருதி வழிந்தோடும் தடங்களை
மிதித்தித்தபடி
பெருவெளி நீட்சியாய்
நகர்கிறது.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More