கார்த்திகை மாதத்தில்
இருபத்தோராம் நாள்
மாவீரர் வாரம் ஆரம்பம்.
களமாடியவர் நினைவுகளோடு.
காடேறிய காவலர்
காத்திருந்து தடுப்பார்.
எதிரியின் வரவை
ஊருக்குள் விடாதே!
ஊமையாக இருப்பதாய்
பலர் பேசிடும் போது
உடலால் சூழலறிந்து
எதிரி நகர்வை அறிவார்.
பாம்புக்கும் – காட்டு
விலங்குக்கும் – அவர்கள்
நட்பு பாராட்டி விட்டு
தாமும் காட்டோடு கலப்பார்.
வரியுடை அணிந்த மேனி
வாடிய போதும் பசியால்
நாடியது இல்லை ஓய்வை.
விடியும் முன்னே பகை முடிக்கும்.
பகை வீடு புகுந்து – அவர்
நெடுந்தூரம் நடந்து;
இலக்கை அடைந்து;
காத்திருப்பார் கட்டளைக்கு.
முடிவு எதுவென்று தெரிந்தும்
கட்டளை மதித்து இருந்து
காரியம் முடிந்து திரும்புவார்.
அவர்கள் தான் எம் வேங்கைகள்.
திறனறிந்து கொடுத்த வேலை
தேர்வதை வென்றிட வைக்கும்.
துயரதை நீக்கி விட்டு
மகிழ்வை தந்து நிற்கும்.
நதுநசி