செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கண்ணீர் துளிகள் | கவிதை | ச. இரவிச்சந்திரன்

கண்ணீர் துளிகள் | கவிதை | ச. இரவிச்சந்திரன்

1 minutes read

வயதோ பதினான்கு
வயதுக்கு மீறிய வளர்ச்சி
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான்
வாழ்க்கை என்றால்
என்னவென்றே தெரியாத அந்த
வயதுக்கு வராத சிறுமிக்கு
வாழ்க்கை பிரச்சினை
வழக்காக வந்தது
வழக்காட வந்தாள்
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள்
வாழ்க்கையை வழக்காக பார்க்கும்
வல்லமை படைத்த வல்லுனர்கள்
வாழ்வின் பெரும்பகுதியை
வழக்குகளோடு கழித்த
வயதான நீதிபதி
வந்தார் அமர்ந்தார் அவள்
வழக்கை கேட்க ஆயத்தமானார்
வார்த்தைகளா அவைகள் ?
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள்
எனக்கு எட்டு வயதிற்குள்
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது
காதலோ பத்து வயதில்
கலர் கலராய் வானவேடிக்கை காட்டியது
கட்டி பிடித்து தரும் முத்தம் என்
கனலை கூட்டியது பதினோராம் வயதில்
ஓடி போகலாம் வாழ்க்கை நடத்தலாம் என்பதை
ஓராண்டுக்கு முன் தெரிந்து கொண்டேன்

இதனையும் சொல்லி தந்த
ஆசான் கள் யார் தெரியுமா?
தான் வாழும் சமுகத்தை
தரங்கெட்ட நரகமாக்கும்
இன்றைய எழுத்து வேந்தர்களும்
இயக்குனர் செம்மல்களும் தான்
திரைப்படங்கள் என்னை
தடம் புரள சொன்னது
காமத்தில் கரை காண தூண்டியது

தொலைகாட்சி நாடகங்களோ என்னை நானே
தொலைத்துக் கொள்ள வழிகாட்டியது
வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே
வயிற்றில் மூன்று மாத கரு

கருவைச் சுமந்தவளாய் நான்
களங்கப்பட்டவளாய் நான்
களங்கப்படுத்தியதோ
காமத்தை அறியாத விடலைசிறுவன்
அகவை பதினாறுக்குள்
கற்பழிப்பு வழக்கை அவன் மேல் தொடரலாம் என்
கற்புக்கு ஓர் விளையும் வாங்கி தரலாம்
என் வாழ்க்கைக்கு என்னை
பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாமல்
என்னை கெடுத்தவனுக்கு
தன வாலிபத்தில் பெரும்பங்கை
சிறையில் கழிப்பவனுக்கும்
என்ன தரபோகிறது ?
இந்த சமூகமும் நீதி மன்றமும்
என் தாய் மாண்டு போனாள்
நான் கெட்டு போன செய்தி கேட்டு
என் தகப்பன் மாயமானான்
நான் கர்ப்பம் தாங்கி நின்றதை கண்டு
என்னோடு பிறந்தவளோ
தானே தனித்து போய் அநாதை ஆனாள்

இன்று இந்தவழக்கு முடியும் வரை
இரக்கத்தோடு உச் கொட்டும் சமூகம்
நாளை என்னை எப்படி பார்க்கும்?
பதினாலு வயதிலேயே
பத்தினி தனம் விட்டவள் தானே என்று
தொட்டு பார்க்கும் துணிந்து
படுக்கை போட்டு முந்தி விரிக்க சொல்லும்

இத்தனையும் இழைத்த
இன்றைய இயக்குனர் எழுத்தாளர்களை
இந்திய தண்டனை சட்டம் தண்டிக்குமா ? இல்லை
இந்த அவலங்கள் தொடராதிருக்க
காதலை கடை சரக்காக்கும்
கயமைக்கு தடை விதிக்குமா ?

வழக்கறிஞர்கள் கேட்டனர் அவள்
வாழ்க்கையை
வழக்கின் வட்டத்திற்குள் அடைத்தனர்
வழக்கின் விளிம்பில் நின்று
வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்
என்னை கெடுத்தவனுக்கு எட்டாண்டு சிறை
எனக்கோ வாழ் நாள் முழுவதும் வதை
வாழ்க இன்றைய திரைப்படங்கள் நாடகங்கள்!

 

நன்றி : ச. இரவிச்சந்திரன் | வார்ப்பு இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.