Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்

கடவுள் மறைத்து வைத்த உலகம் | துவாரகன்

1 minutes read

கொள்ளைக்காரரின் கண்களிலிருந்து
கடவுள்
அந்த உலகத்தை
மறைத்து வைத்திருந்தார்.

அது குழந்தைகளின் உலகம்.

அங்கே
பறவைகளின் சங்கீதம் இருந்தது
காற்றுக் கரங்களின்
அரவணைப்பு இருந்தது
தாய்மடியின் உயிர்ப்பு இருந்தது

கொடியோரின் சுவடுகள் இல்லை
சுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லை
உயிர் பறிக்கும் குழிகள் இல்லை

நீரும் நிலமும் வெளியும்
வரைந்து வைத்த
ஓவியங்கள் இருந்தன.

உங்கள் திமிர்த்த பார்வைகள்
அங்கு படவேண்டாம்
உங்கள் பாவப்பட்ட கரங்கள்
அங்கு தீண்ட வேண்டாம்

அது குழந்தைகளின் உலகம்.
17102021

துவாரகன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More