Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சொரணை கெடுதல் | துவாரகன்

சொரணை கெடுதல் | துவாரகன்

1 minutes read

சொரணை கெடாதிருக்க
பனையோலை ஈர்க்கால்
நாக்கு வழித்துப் பழகியவர் நாங்கள்.

மரம் தாவும் குரங்குகளில்
என்ன அதிசயம் இருக்கப் போகிறது?
வார்த்தைகளுக்கு
அர்த்தமிருக்க வேண்டுமல்லவா?

பச்சை மிளகாயை சுவிங்கம்போல் மென்று கொண்டிருக்கிறார்கள்.
பாகற்காயை கச்சான் கொட்டைபோல் கொறிக்கிறார்கள்.
நாவுகளும் மரத்துப் போய்விட்டனவா?

மனிதர்கள் என்றால்
நாவு என்ற ஒன்று இருக்கவேண்டுமல்லவா?

வால்கா நதிக்கரையில் கூன் நிமிர்த்தி நடந்தவர்களை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
25052022

-துவாரகன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More