தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்குகொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.
இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
தக்காளியை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி ஜூஸை கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக செய்து குடித்து வந்தால் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
மேலும் ரத்த ஓட்டம் சீராகி சருமம் ஜொலிக்கும். காலைச் சிற்றுண்டியுடன் பால், சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸை அளவாகத் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.
0