செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 4 வேப்பிலை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும்…!

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 4 வேப்பிலை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும்…!

2 minutes read

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் எதிர்ப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

நிம்பின், நிமாண்டியல் போன்ற வேதிப் பண்புகளைக் கொண்டது. ஆனாலும் நாம் சாப்பிட மறுப்பதற்குக் காரணம் அதிலுள்ள அதிகப்படியான கசப்புத்தன்மை தான். இனிப்பைப் பார்த்தாலே எச்சில் ஊறுகிற நம் வாய்க்கு கசப்பு என்றால் பிடிக்காது தான். ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்களைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள்.

நீரிழிவு நோய் தான் மற்ற எல்லா நோய்களுக்குமான மூலப் பிரச்சினையான இருக்கிறது. சர்க்கரை என்பது ஒரு நோயல்ல. அது மற்ற நோய்களை எளிதாக நம் உடலுக்குள் கொண்டு வரும் ஒரு நுழைவாயில் என்று சொல்லலாம். அத்தகைய நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கு வேப்பிலை மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்த ஒரே வழி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு வேப்பிலை மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு லிட்டர் தண்ணீரில் 15-20 வேப்பிலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அது அரை லிட்டராக வற்றும் வரை கொதிக்க விட்டு, பின் இலைகளை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதேபோன்று மதியம் மற்றும் இரவு உணவுக்கு முன் அரை டம்ளர் என அந்த நீரைக் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். தொடர்ந்து இதை செய்து வந்தால் ஒருசில மாதங்களில் நீரிழிவு பிரச்சினையே இருக்காது.

டயேரியா போனாலே நமக்கு தயிர், வாழைப்பழம், அரிசி சாதம் ஆகியவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதைவிட மிக எளிமையானது இந்த வேப்பிலை வைத்தியம். ஆம். அதிகப்படியான டயேரியா பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த வேப்பிலை இருக்கும். டயேரியாவால் அவப்படுகிறவர்கள் வேப்பிலையை அப்படியே வெறுமனே மென்று சாப்பிடுவதை விட, 10 வேப்பிலைகளை நன்கு மை போல அரைத்து, அதை மோரில் கலந்து குடிக்க டயேரியா உடனே கட்டுக்குள் வரும்.

​குடல் புழுக்கள்
சின்ன குழந்தைகளுக்கு தான் இந்த குடல் புழுக்கள் பிரச்சினை அதிகமாக ஏற்படும். ஏனெனில் அவர்கள் சாக்லெட் போன்ற இனிப்புப் பொருள்களை மிக அதிக அளவில் சாப்பிடுவதால் இந்த பிரச்சினை ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் பெரியவர்களுக்கும் இந்த குடல் புழுக்கள் பிரச்சினை ஏற்படும். குடல் புழுக்களில் பல வகை உண்டு. அவற்றை வெளியேற்றவும் நீக்கவும் கூட வேப்பிலை சிறந்த மருந்தாக இருக்கும்.

எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
குழந்தைகளுக்கு குடல் புழுக்கள் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம்.

கொழுந்து இலைகளில் அவ்வளவாக கசப்பு இருக்காது. மிகவும் இளமையாக இருக்கும் கொழுந்துகளில் லேசான இனிப்புச் சுவையும் இருக்கும். பெரியவர்களாக இருந்தால் இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, சுண்ட வைத்துக் கொடுக்கலாம்.

​இனிப்பு சேர்க்கலாமா?
2 கிளாஸ் அளவுக்கு தண்ணீரில் 5 வேப்பிலைகளை மட்டும் கிள்ளிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டிய பிறகு, கால் ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

1 லிட்டர் அளவு தண்ணீரில் 10 முதல் 15 இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அதை வடிகட்டிப் பின் அந்த நீரை மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு முன் குடிக்கலாம்.

நன்றி-தமிழ் நியூஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.