Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எடையை குறைக்கும் மற்றும் கூட்டும் உணவுகள்

எடையை குறைக்கும் மற்றும் கூட்டும் உணவுகள்

8 minutes read

எடை குறைக்கும் உணவுகள்
உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புகாரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். கெட்டக் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை தவிர்த்து நல்லக் கொழுப்பைத் தரும் உணவுகளைத் தெரிவு செய்தால் உடல் எடை கூடாமல், குறைவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இப்பொழுது நல்லக் கொழுப்பைத் தரும் நல்ல உணவுகள் பற்றி பார்ப்போம்.

உடல் எடையைக் குறைக்கும் நல்லக் கொழுப்பு உணவுகள்

  1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை: ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத் தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவையான புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக்கொழுப்புச் சேரும்.
  2. இயற்கை இனிப்பு உணவுகள்: இயற்கை இனிப்புகளான தேன், கருப்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை, மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்க்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.
  3. மிளகு: எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்புச் செரித்து விடுகிறது.மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அசைவ உணவின் விஷத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும்.
  4. மீன்கள்: குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ளதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.
  5. மாமிசம்: பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தய மலமேயாகும். அதே போல், மாமிச உணவில் 1/3 பங்கு மட்டுமே சக்தியும் 2/3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது. மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான். அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவச அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலூட்டிகள் (ஆடு, மாடு மற்றும் பன்றி) மாமிசம் கெட்டக் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.
  6. எண்ணைகள்: அசைவ உணவைவிட எண்ணைதான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணையில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்டக் கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன் படுத்திய எண்ணையை மீண்டும் சுடவைத்து பயன்ப்டுத்தும் போது அது மிகக் கொட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணைகளில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணையாகும். இதை இரண்டு அல்லது மூன்று முறை சுடவைத்தாலும் கெட்டக் கொழுப்பாக மாறுவதில்லை. ஆலிவ் எண்ணையில் உள்ள ஒமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணையானது மற்ற எண்ணைகளைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம்தான், ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே. ஆலிவ் எண்ணைக்கு அடுத்து சிறந்த எண்ணை தேங்காய் எண்ணையாகும். இதுவும் ஓரிரு முறை சுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணை நல்லெண்ணையாகும். ஆலிவ் எண்ணையும் தேங்காய் எண்ணையும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது. நல்லெண்ணை சமையல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனபதால்தான் அதை நல்லெண்ணை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணைகளைத் தவிர மற்ற எண்ணைகளெல்லாம் ஆரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணைகளைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு. உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணையெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate countries) ஏற்றதாகும். நம்மைப்போல் வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணை நல்லெண்ணையேயாகும்.
  7. தேங்காய்: தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவச அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்புகளையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும். தேங்காயை சமையலில் பயன் படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும், இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது. இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்ய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப்போகிறது. தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் ஆரோக்கியத்திற்கு கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
  8. முட்டை: முட்டையும் ஒரு முழுமை உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்த ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குமுட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முழுமையற்றதை எடுத்துக்கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்திவாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.
  9. பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள்: பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஒமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.
  10. வெண்ணைப்பழம்: ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஒமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய் படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.

நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆரோக்கியமாய் வாழுங்கள்.

நல்லதுக்கு நீங்கள் மாறாவிட்டால்

கெட்டது உங்களை கெடுத்துவிடும்.

எடை கூட்டும் உணவுகள்
இனிய நண்பர்களே! இந்த உலகில், உடலைப் பருமனாய் வளர்த்து, கழிவுகளைச் சேர்த்து, வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று யாரும் தீர்மானமாக இருப்பதில்லை. நாம் எல்லோரும் குண்டு தன்மையில் சிக்காமல் இருக்கவே விரும்புகிறோம். ஆனால், வழி தெரியாமல்தான் முழிக்கின்றோம். நண்பர்களே! நாம் குண்டாவதைத் தவிர்க்கும் செயல்களை செய்தாலே போதும், வெற்றி கிடைக்கும். அந்த விதத்தில் நம்மை குண்டாக்கும் உணவுகளை கண்டறிந்து தவிர்த்தால் குண்டாக மாட்டோம். நண்பர்களே! இந்த அத்தியாயத்தில் கெட்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுகள் பற்றி இனி பார்ப்போம்.

உடலை குண்டாக்கும் கெட்ட கொழுப்பு உணவுகள்:

  1. துரித உணவுகள்: துரித உணவுகள் (Fast food) மற்ற எல்லா உணவுகளை விட மிக அதிகமான கெட்ட கொழுப்பை உண்டாக்கும் தன்மை கொண்டவை ஆகும். துரித உணவுகளை அதி விரைவாக சூடாக்குவதால் உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்ரதுவிடுகின்றன. ஆக, சத்துக்களும் சுவையும் அற்ற இவ்வித உணவுகளை நாம் விரும்பி சாப்பிட செயற்கை இரசாயண சுவையூட்டிகளான அஜினோமோட்டோ மற்றும் சமயல் சோடா ஆகியவற்றை சேர்த்து ஆவி பறக்க கொடுக்கிறார்கள். உண்மையில் இவ்வித உணவுகளை சூடு ஆறியபின் வாயில் வைக்க சகிகாது. அப்போது தெரியும் அதன் உணமைத் தரம். நண்பர்களே! எந்த ஒரு உணவையும் பக்குவமாய் சமைத்தால் உணவின் பாகுத்தன்மை (Colloidal property) கெடாமல் உயிர்ப்புத் தன்மை காக்கப்பட்டு உயிர்ச் சத்துக்கள் கெடாமல் உணவு தரமாக செரிக்க வழி கிடைக்கும்.
  2. மாவுச் சத்து உணவுகள்: நம் உழைப்பு தேவைக்கும் அதிகமான மாவுச் சத்து எடுத்துக்கொள்ளும் போது, நம் உழைப்புக்கு வேண்டிய சக்தியை கொடுத்தது போக மீதம் உள்ள மாவுச் சத்தெல்லாம் கொழுப்பாக மாறிவிடும். செயற்கை இனிப்புகளை உள்ளடக்கிய அல்வா, சாக்ரின், செயற்கை குளிர் பாணங்கள், வெள்ளைச் சர்க்கரை மற்றும் முழுமையல்லாத மாவுச் சத்துக்களை உள்ளடக்கிய மைதா (பரோட்டா) உணவுகள், வெள்ளை இரவை, வெள்ளை சேமியா, நூடுல்ஸ், ஆகியவை அனைத்தும் கெட்ட கொழுப்பாகவே மாறும். இவைகளில் உயிர்ச் சத்துக்களும் (Vitamins) தாதுச் சத்துகளும் (Minerals) நீக்கப்படுவதால் கெட்ட குலுக்கோஸாக மாறி பின் கொட்ட கொழுப்பாக மாறி விடுகின்றன.
  3. பச்சை மிளகாய்: பச்சை மிளகாயை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நம் இரைப்பை அமிலத்தன்மை அடைந்து, கல்லீரலைக் கெடுத்து, கொழுப்பு மற்றும் புரதச் செரிமானத்தைக் கெடுத்துவிடுகிறது. இதன் விளைவாக கெட்ட கொழுப்பு உற்பத்தி அதிகமாகிறது. இன்னொரு புரம் பச்சை மிளகாய் நம் நரம்புகளை நீர்த்துப் போகவைத்து, கெட்ட கொழுப்பு தேங்கும் இடங்களை மூளைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.
  4. புளிப்பு உணவுகள்:புளிப்புச்சுவை அதிகம் கொண்ட உணவுகள் கல்லீரலை அதிகம் தூண்டி பித்தத்தை கெடுத்து விடுவதால் கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிற்து. குறிப்பாக அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் போது புளிப்புச் சுவையை குறைவாக எடுத்ததுக் கொள்வது நல்லது. குறிப்பாக மாங்காய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுநல்லது. அசைவம் சுலபமாகச் செரிக்க காரத்தையும் (குறிப்பாக மிளகுக்காரம்) துவர்ப்பையும் சேர்த்துக் கொள்வது பயன் தரும்.
  5. மாறுதல் செய்யப்பட்ட கொழுப்பு உணவுகள் (Trans fat) : செயற்கை முறையில் மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு உணவுகளான வனஸ்பதி (டால்டா), பனீர் (Paneer), ஐஸ்கிரீம், பதப்படுத்திய (Processed) கொழுப்பு உணவுகள், கொழுப்பு நீக்கிய பதப்படுத்திய பால் ஆகியவை இரைப்பை மற்றும் கல்லீரலைக் கெடுத்து கெட்ட கொழுப்பு உற்பத்தியை அதிகரிக்கிறது.
  6. வறுத்த உணவுகள்: நம் உணவை சாலடாக (Salad) சாப்பிட்டால் தரமாக செரித்துவிடும். அதையே இலேசாக வேகவைத்து சாப்பிட்டால் செரித்துவிடும் ஆனால் கொஞ்சம் உயிர்ச் சத்துக்கள் போய்விடும். உணவை அதிகமாக வேகவைத்தால் உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதே உணவை எண்ணையில் பொறித்து சாப்பிட்டால் உயிர்ச் சத்துக்கள் அழிவதுமட்டும்ல்லாமல் உணவின் கொழுப்பு அனைத்தும் கெட்ட கொழுப்பாக மாறிவிடும். ஆகவே, நம் உணவை அதிகம் எண்ணையில் பொறிக்காமல் குறைவாக வதக்கி சாப்பிடுவது நல்லது.
  7. உருளைக் கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர் பிரதேசங்களில் (Temperate region) நெருப்பாக வளரும் ஒரு மாவுச் சத்து உணவாகும். அந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இதை மாவுச் சத்து உணவாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அது அவர்களுக்கு அந்தக் குளிர் சூழலில் ஒருவித வெப்பத்தை அளிப்பதால், அது அவர்களுக்கு உகந்த உணவாக இருக்கும். அதுவே, நம்மைப்போல் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், இதை எடுத்துக்கொண்டால் நம் உடலை மேலும் உஷ்ணப்படுத்தி கல்லீரலைக் கெடுத்து, கொழுப்புச் செரிமானத்தையும் கொடுத்துவிடும். மேலும், நம்மவர்கள் அரிசி அல்லது கோதுமை உணவில் உள்ள மாவுச் சத்தோடு உருளைக்கிழங்கில் உள்ள மாவுச் சத்தையும் அதிகப்படியாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நம் உழைப்புக்கு அதிகப்படியான மாவுச் சத்தானது அதிகப்படியான கொழுப்பாக மாறி குண்டாக வழிவகுக்கிறது. வெப்பப் பிரதேசங்களில் உருளைக்கிழங்கானது வாய்வை உண்டாக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சமைப்பதாலும், வறுவலாக உண்பதாலும் கண்டிப்பாக வாய்வை உண்டுபன்னுகிறது. நண்பர்க்ளே! உருளைக்கிழங்கின் மேல் உண்டான ஆசையை விட்டால் குண்டாவது குறையும்.
  8. நொறுக்குத்தீனிகள்: நொறுக்குத்தீனிகள் மொறுமொறுப்பாக இருப்பதால் நம் வயிற்றில் உள்ள ஈரப்பதத்தை காலி செய்து மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்துவிடும். இதனால், கல்லீரலூக்கு கிடைக்க வேண்டிய மண்ணீரல் செரிமான சக்தியானது குறைந்து கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிறது. முடிவாக, நொறுக்குத்தீணீகளில் உள்ள கொழுப்புப் பொருள் யாவும் கெட்டக் கொழுப்பாக மாறிவிடுகின்றன.
  9. குளிர் உணவுகள்:ஐஸ்கிரீம், மில்க் ஷேக், குளிர் நீர் (Ice water), குளிர் பதன உணவுகள் மற்றும் குளிர் பாணங்கள் ஆகியன மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்து, கல்லீரலுக்கு கிடைக்க வேண்டிய சக்தி குறைவதால் கெட்டகொழுப்பு உருவாக வழியாகிறது.
  10. தயிர்: குண்டாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் தயிரை அறவே விட்டுப்பாருங்கள், நீங்கள் மேலும் குண்டாகமாட்டீர்கள். தயிரானது செரிக்க 18 மணி நேரம் ஆகும். ஆகவே, தயிரை பகலில் மட்டுமே சாப்பிடலாம். இரவில் சாப்பிடும் தயிரானது செரிப்பதற்குள் பெருங்குடலை அடைந்து, செரிமானம் ஆகாததால் மலச்சிக்கலாக தேங்கிவிடுவது நிகழ்கிறது. செரிக்காத தயிர் புளித்து, நுரைத்து, வாய்வாகி, கெட்ட கொழுப்புடன் சேர்ந்து உடலை குண்டாக்கிவிடுகிறது.
  11. அதிகத் தண்ணீர்: தாகம் எடுக்காத போது தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளும் தண்ணீரானது செரிமான நொதிகளை நீர்த்துப்போக வைத்து செரிமானத்தை கெடுத்து கெட்ட கொழுப்பு உற்பத்திக்கு வழி வகுக்கிறது. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது நல்லது. அதே போல், சாப்பிடு அரை மணி நேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது. தாகத்திற்கு மட்டும் தண்ணீரும், பசிக்கு உணவும் எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக குண்டாக மாட்டோம்.
  12. ஊறுகாய்: உப்பும் புளிப்பும் அதிகம் உள்ள ஊறுகாயானது அதிகப்படியாக நொதிகளைச் சுரக்கச் செய்து செரிமானம் முடியும் முன்னே காலி செய்ய வழிகாண்கிறது. ஊறுகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது அதிக அளவில் உணவினை எடுக்கவைத்து, உழைப்புக்கு மிஞ்சிய உணவை கொழுப்பாக மாற்றிவிடுகிறது.
  13. கடலைப் பருப்பு: தோல் நீக்கிய கொண்டைக்கடலையானது வாய்வையே உண்டுபன்னும். இதை பருப்பு வடையாக சாப்பிடும் போது இன்னும் மோசம். வாய்வானது கல்லீரலைக் கெடுத்து கொழுப்புச் செரிமானத்தை பாதித்துவிடும். கடலைப்பருப்புக்கு பதில் வாய்வு உண்டாக்காத பாசிப்பருப்பை தாளாரமாக சாப்பிடலாம்.
  14. பிஸ்கெட் மற்றும் சாக்லேட்: பிஸ்கட் மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டும் மன்னீரல் மற்றும் கல்லீரல் செரிமானத்தைக் கெடுத்து உடற்கழிவு தேக்கத்திற்கு வழிவகுக்கும். பிஸ்கட் வயிற்று மந்தத்தையும், உப்புசத்தையும் தரக்கூடியது. சாக்லேட் பித்தத்தைக் கெடுத்து உடலை வறட்சியாக்கி இரத்தத்தை முறிக்கச் செய்யும். இதனால் கெட்ட கொழுப்புச் சேரும் தன்மையைத் தரும்.

நண்பர்களே! கெட்ட கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நல்லக் கொழுப்பு உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருசாமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று ஆரோக்கியமாய் வாழுங்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா, ஆகையால்,

தீயதை விட்டு நல்லதைத் தெரிவு செய்வோம்.

ஆதாரம்: தன்னம்பிக்கை மாத இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More