ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை மையம் நாட்டின் பல பகுதிகளில் 34 டிகிரி (95 டிகிரி பாரன்ஹீட்)-க்கும் அதிகமான வெயில் அடிக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் வெயில் கொடுமைக்கு 6 பேர் இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெப்ப நோயால் பாதிக்கப்பட்ட 8600-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தீ மற்றும் பேரிடர் மேனேஜ்மென்ட் ஏஜென்சிஸ் தெரிவித்துள்ளது.