ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில், இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 33 பேர் நேற்று இறந்தனர். கினியா தலைநகர் கொனாக்ரியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் திடீரென பரவிய வதந்தியை அடுத்து, மக்கள் வெளியே செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி, பெண்கள் உட்பட, 33 பேர் இறந்தனர். இதை தேசிய துக்கமாக அறிவித்துள்ள கினியா நிர்வாகம்,
ஒரு வாரம் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளது. ,