சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்கறிஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி, அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குகளில் வாதிடும் வழக்கறிஞர் வாங் கான்பா , இந்தோனேசிய மானுடவியல் நிபுணர் சார் மார்லினா மானுருங், ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஒமரா கான் மசூதி, பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான தி சிட்டிசன்ஸ் பவுண்டேஷன், பிலிப்பின்ஸ் ஆசிரியர் ராண்டி ஹலாசன் ஆகியோர் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
