ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை, மதுரை வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியானவுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மை, உருவப்படங்களி எரித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டின் மீதும், மதுரையில் உள்ள அவரது வீட்டின் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.