பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமருக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்து இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரியவையும் பிரதமர் ரணில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில் குறித்த இருவருடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநேகமாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் பிரதமர் ரணில், சபாநாயகர் கருஜயசூரிய, அமைச்சர் சஜித் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.