Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சூடான் மோதலில் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

சூடான் மோதலில் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

1 minutes read

சூடானில் ஏற்பட்ட இராணுவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வரை கொல்லப்பட்டோர் தொகை, ஐ.நா பணியாளர்கள் உள்ளடங்கலாக 97ஆகவே காணப்பட்டது.

இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், துணை இராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, தலைநகரான கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை இராணுவ படையினர் அறிவித்தனர்.

இதனால் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. பின்னர் இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது.

இந்த நிலையில், அங்கு நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் கார்டூம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி : சூடானில் இராணுவ மோதல்; பலி எண்ணிக்கை 97ஆக உயர்வு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More