Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கார் பந்தயத்தில் துப்பாக்கிச்சூடு

கார் பந்தயத்தில் துப்பாக்கிச்சூடு

0 minutes read

நேற்று கார் பந்தயம் நடைப்பெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில்  நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை பொலீசார் தேடி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More