Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மக்களுக்குத் சேவையாற்றுவதே எமது கடமை மன்னர் சார்ல்ஸ்

மக்களுக்குத் சேவையாற்றுவதே எமது கடமை மன்னர் சார்ல்ஸ்

0 minutes read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் (Charles), தற்போது பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்.

தனிப்பட்ட சில சந்திப்புகளை மட்டும் அவர் தொடர்ந்து நடத்திவருவதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், 75ஆவது காமன்வெல்த் ஆண்டுநிறைவையொட்டி பதிவுசெய்யப்பட்ட உரையில் “மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதே எமது கடமை” என்று மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்திய அனைத்து நல்லுங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மன்னரின் தாயார் 2ஆம் எலிசபெத் ராணி காலமான பிறகு 2022இல், 75ஆவது வயதில் அவர் இங்கிலாந்து மன்னராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

மன்னர் சார்ல்ஸ் ஓய்வில் இருக்கும்போது அவரது பொறுப்புகளில் பெரும்பாலானவற்றை அவரது மனைவி ராணி கமிலாவும் (76 வயது ) அவரது மகன் இளவரசர் வில்லியமும் (41 வயது ) கவனித்துவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More