கிழக்கு இலண்டன், டேகன்ஹாமில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகிலுள்ள வீடுகளில் வசித்த குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக டேக்ன்ஹாமில், கிளெமென்ஸ் வீதிக்குப் பின்னால் உள்ள வனப் பகுதிக்கு 20 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 125 தீயணைப்பு வீரர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
8 ஹெக்டேர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

