அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள “அமைதி வாரியம்” என்ற முயற்சியில் வத்திக்கான் பங்கேற்காது என்று வத்திக்கானின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியான கார்டினல் பியட்ரோ பரோலின் அறிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய நெருக்கடி நிலைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னெடுத்து நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமைதி வாரியத்தில் இணைந்து கொள்ளுமாறு போப் லியோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து கருத்து தெரிவித்த பரோலின் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு வெளிநாட்டு பிரதேசத்தின் விவகாரங்களை கண்காணிக்க ட்ரம்ப் ஒரு தனி வாரியத்தை அமைப்பது, காலனித்துவ மனப்பான்மையை பிரதிபலிக்கும் செயல் போல் இருப்பதாக பல்வேறு நிபுணர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.