செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக சட்டப்பேரவை தேர்தல் விஜய் – ஸ்டாலின் இடையிலான போர்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விஜய் – ஸ்டாலின் இடையிலான போர்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

1 minutes read

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல், தமக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையிலான நேரடி அரசியல் போராக அமையும் என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், மக்களை உண்மையாக நேசிக்கும் சரியான தலைமை இல்லாத காரணத்தால், முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தற்போது மக்களை நேசிக்கும் இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரவுள்ள சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஊழல், லஞ்சம் மற்றும் சரியான நிர்வாகம் இல்லாத தற்போதைய ஆட்சிக்கும் இடையிலான போராக இருக்கும் என்றும் விஜய் கூறினார். இது விஜய்க்கும், ஸ்டாலின் தலைமையிலான அரசியல் அணிக்கும் இடையிலான மோதல் என்றும், “தீய சக்தி திமுக மற்றும் தூய சக்தி தவெக” இடையிலான போராகவே இந்த தேர்தல் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை “முரட்டு ஜல்லிக்கட்டு காளை”க்கு ஒப்பிட்ட விஜய், அந்தக் காளையை தைரியமாக அடக்கும் சிறிய பையன் தமிழக வெற்றிக் கழகம் என உருவகக் கதையையும் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.