ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழக ஒன்றிலேயே இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் அரச படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதேசமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
