தாய்லாந்து வரும் வெளிநாட்டினருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 2 மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்கும் நவீன பரிசோதனை மையம் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 39 நாட்களாக தாய்லாந்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
அவ்வாறு வருவோருக்கு, கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில், உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 2 வாரத் தனிமைப் படுத்தலில் இருந்து அரசு விருந்தினர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வியாபார நிமித்தமாக வருவோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.