Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தற்காலிக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம்

தற்காலிக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம்

0 minutes read

பேராதனை பல்கலைக்கழகத்தை இன்று முதல் தற்காலிக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்தார்.

அதற்கமைய, பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போது பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்களை தங்களது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More