கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஐகத் மனுவர்ன, தம்மிக்க முனசிங்க, ஜெஹான் அப்புஹாமி மற்றும் எரங்க குணசேகர ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.
ரனிது சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ஜினரத்தன தேரர் ஆகியோர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிணை கிடைத்த போராட்டக்காரர்கள் பிணையை செலுத்தாமல் விளக்கமறியலில் தொடர்ந்தும் உள்ளதாக போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.