இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டொக்டர் எல்.டி.கித்சிறி இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்சம் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், 30 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் 20 முதல் 30 மில்லியன் நாய்கள் உள்ளதாகவும், இருப்பினும் ஆண்டுக்கு 11 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 வீதமான நாய்க் குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குறித்த நோய் பரவுவதை குறைக்க முடியும்.
நீர்வெறுப்பு நோயினால் வருடாந்தம் 20 தொடக்கம் 30 வரையான மரணங்கள் ஏற்படுவதுடன், அனைத்து நாய்களுக்கும் விசர்நாய்க்கடி தடுப்பூசி போடுவது அவசியமென்று அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.