Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை 9வது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத் தொடர்

நாளை 9வது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத் தொடர்

1 minutes read

நாளை (03 ) காலை10.30 மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் 2290/35 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஜனாதிபதியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் தொடர்பான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் மற்றும் அது தொடர்பான தகவல்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் இறுதியாக கடந்த புதன்கிழமை கூடியது.

இதன் போது அவசரகால நிலைமை தொடர்பான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பின் மூலம் அது நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாளை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நடைபெறவுள்ளதோடு தற்போதைய பொருளாதார நெருக்கடி, எதிர்கால திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக அறியவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More