நேற்றைய தினம் (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரும், YouTube பிரபலமுமான ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் கடந்த மே 21ஆம் திகதி ரத்திந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்றையதினம் (02) கோட்டை நீதவான் நீதிமன்றம், அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பிணைத் தொகையை பின்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.