இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03) பிற்பகல் சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு கோட்டை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்படும்போது, “போராட்டம் நடாத்துவது எமது உரிமை” என ஜோசப் ஸ்டாலின் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.