Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

1 minutes read

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்ட 180 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனைக் கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்., குருநகர் கடற்பரப்பில் இன்று சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட படகு ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்ட போது படகில் இருந்து கஞ்சாவை மீட்டனர்.

அதையடுத்து படகில் இருந்த நபரைக் கைது செய்த கடற்படையினர், படகையும் கைப்பற்றினர்.

கைதான நபரைக் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More