கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மகதீஸ் அபிசாகன் (வயது 20) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் நின்ற வேலியுடன் மோதுண்டு தலையில் பலமாக அடிபட்ட நிலையில் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றுப் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.