புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை!

மன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை!

1 minutes read

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவு, தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் 35 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட 1200 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் மாதிரிகள் கொழும்பு, முல்லேரியா வைத்தியசாலை ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு கட்டம் கட்டமாக அதன் முடிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் தாழ்வுபாடு கிராமத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 170 பீ.சி.ஆர்.பரிசோதனையின் முடிவில் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவேதான் வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட MN/70 கிராம அலுவலர் பிரிவினை தற்காலிகமாக தனிமைப்படுத்துமாறு கொழும்பு கொவிட்-19 தடுப்பு செயலனியிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளோம்.

இதற்கமைய குறித்த கிராமம் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு அந்த பிரதேச மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More