செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முதலை வாயை கைகளால் திறந்து உயிர் தப்பிய  நபர்

முதலை வாயை கைகளால் திறந்து உயிர் தப்பிய  நபர்

0 minutes read

அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.

மார்க்கஸ் மெக்கோவன் (Marcus McGowan) என்ற அந்த நபர் முதலையின் வாயைத் தமது கைகளால் திறந்து உயிர் தப்பினார்

மனைவியோடும் நண்பர்களோடும் கடலில் நீந்திக்கொண்டிருந்த அவர், முதலில் சுறாமீன் தம்மைத் தாக்கியதாக நினைத்தார்.

பின்னர் அது முதலை என்பதை உணர்ந்த அவர், அதன் வாயைத் திறந்து தன் தலையை வெளியே எடுத்ததுடன், முதலை அவரை மீண்டும் தாக்க முயன்ற போதும் அதனிடமிருந்து தப்பியுள்ளார்.

இதனையடுத்து, குழுவினரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More