செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிச்சூட்டில் 9 வயது சிறுமி பலி!

துப்பாக்கிச்சூட்டில் 9 வயது சிறுமி பலி!

1 minutes read
குருணாகல், ஹெட்டிபொல – மகுலாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் ஒரு சிறுமியும் படுகாயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் என்றும், ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகிலிருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி சிறுமியின் பாட்டி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டின்போது பயன்படுத்தப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று  தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More