உங்கள் சுவையை தூண்டும் நண்டு குருமா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நண்டு குருமா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
குறிப்பு
உங்களை சுவைக்கும் தூண்டும் கமகமக்கும் தமிழ்நாடு சமையல் உணவுகள்.காலை உணவு மற்றும் மதிய உணவு இரவு உணவு மற்ற சில உணவுகள்.செய்ய முதலில் தேவையான பொருட்கள் தூயமையாக இருப்பது நல்லது.காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும்.சமையலில் எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.
உணவு செய்முறை : நண்டு குருமா
-
Step 1.
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவேண்டும் . பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலவை கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவேண்டும்
-
Step 2.
அதில் பச்சை மிளகாய் கீறியும், மல்லி தழையை பொடியாக நறுக்கியும் போடவும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்
-
Step 3.
கொஞ்சம் வதங்கிய பிறகு , இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.ஓய்ந் வதங்கியதும் மிளகாய் தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி விடவும். பின் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபது நிமிடம் கொதிக்கவிடவும்.
நன்றி : அறுசுவை சமையல்
